கதிர்காம உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல் அதிகரித்துள்ளது.
1 year ago

கதிர்காம உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாக அங்கு வருகை தரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கதிர்காம உற்சவம் நடைபெறும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களிலிருந்து எரிபொருள் திருடப்படுவதால் அங்கு வருகை தரும் மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், முச்சக்கரவண்டிகளின் பெட்டரி உட்பட உதிரிப்பாகங்களை திருடிச் செல்லும் சம்பவங்களும் பல பதிவாகியுள்ளன.
மேலும், உற்சவத்திற்கு வருகை தரும் மக்களின் கையடக்கத் தொலைபேசிகள் திருடப்படுவதுடன் நேற்று (12) பல்கலைக்கழக மாணவியொருவரின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்று திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசேட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
