வங்காள விரிகுடாவில் நாளை புதிய ஒரு காற்று சுழற்சி உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நாளை புதிய ஒரு காற்று சுழற்சி உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -
அதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது.
இதுவும் மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
சில மாதிரிகள் இது ஒரு புயலாக வலுப்பெறும் என வெளிப் படுத்துகின்றன.
அதேவேளை சில மாதிரிகள் இதனை கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நகர்ந்து வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மித்து வரும் என காட்டுகின்றன.
எவ்வாறாயினும் இதனை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.
எனவே எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையும் பின்னர் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையும் சில பகுதிகளில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேவேளை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இடையிடையே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீனவர்கள் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
