முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி பாடசாலை ஆசிரியர்களால் கறுப்புபட்டி அணிந்து கவனவீர்ப்பு போராட்டம்.

முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி பாடசாலை ஆசிரியர்களால் கறுப்புபட்டி அணிந்து கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று மேற்கொள் ளப்பட்டது.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் தங்கியிருந்த வீடும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
எனவே குறித்த விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளியை கைது செய்யுமாறும், ஆசிரியருக்கு நியாயமான தீர்வு வழங்க வேண்டும், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன் வைத்து வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள் நேற்றுக் காலை 8.00 மணி தொடக்கம் 8.25 மணி வரை பாடசாலை வாயிலில் கையில் கறுப்புப்பட்டி அணிந்து கல்விக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
