
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தக வகுப்பு வசதி களைப் பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு அதிகாரிகள் குழுவினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், உடுவில் பிர தேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 36 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் மாலை 06.50 மணியளவில் வர்த்தக வகுப்பு வசதிகளை பயன்படுத்தி சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் டோஹாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்த இளைஞனின் கடவுச்சீட்டை சோதனையிட்டு பார்த்தபோது குறித்த கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது. மேலும், இளைஞனின் பயணப் பையில் இருந்த இத்தாலி கடவுச்சீட்டில் பல போலி முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள் எமையும் கண்டுபிடிக்கப்பட் டது.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
