மாவீரர் துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி நினைவுகூர விடவும்.-- சி.வேந்தன் தெரிவிப்பு

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நாள் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ள ஏதுவாக மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி உறவுகள் நினைவுகூர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி அநுரகுமார உறுதியாக கூறினார்.
நல்லிணக்கத்தின் முதலாவது நிகழ்வாக மாவீரர் நாள் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.
மாவீரர் துயிலும் இல்ல காணிகளிலிருந்தும் இராணுவத்தை வெளியேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
