மணற்காட்டில் சவுக்கு மரம் வெட்டிய மூவரை, யாழ்.மாவட்ட வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
மணற்காடு சவுக்குமர ஒதுக்கக் காட்டிலிலுள்ள சவுக்குமரம் விறகுப் பயன்பாட்டுக்காக வெட்டப்ப டுவதாக, யாழ்.மாவட்ட வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின ருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைவாக சம்பவ இடத் துக்கு விசேட அதிரடிப் படையின ருடன் விரைந்த திணைக்களத்தினர் ஆறு துவிச்சக்கர வண்டிகளையும், 25000 ரூபா பெறுமதியான வெட்டப்பட்ட சவுக்குமரத்தையும் கைப்பற்றியதோடு சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று நபர் களையும் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்து வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
