கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறை முகங்கள், விமான சேவைகள் அமைச்சு தீர்மானிப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறை முகங்கள், விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.
இதனிடையே, அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் மேற்கு முனைய அபிவிருத்தி பணிகளை அடுத்த மாதத்துக்குள் நிறைவு செய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.
இந்த இரு முனையங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தவுடன் கொழும்பு துறைமுகத்தின் வருடாந்த கொள் கலன் நடவடிக்கை கொள்ளளவு 8 மில்லியனிலிருந்து 13 மில்லியனாக அதிகரிக்குமென துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு குறிப்பிட்டார்.
இது நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் சர்வதேச சந்தைக்கும் வலுவான பிரவேசமாக அமையுமென அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
