இலங்கையில் கடந்த 9 மாதங்களில் இணைய வழி மோசடிகள் 8,000 முறைப்பாடுகள். கணினி அவசர தயார் நிலைக்குழு தெரிவிப்பு

வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இணைய வழி மோசடிகள் தொடர்பில் 8,000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு தெரிவித்துள்ளது.
இணையத்தில் மேற்கொள்ளப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 300 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இணையத்தின் ஊடாக பொதுமக்களின் நிதியைத் திட்டமிடப்பட்ட வகையில் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இணைய வழி ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 200 க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து வெளிநாட்டில் உள்ள நபர்களிடமிருந்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் கைதான வெளி நாட்டவர்கள் சுற்றுலா விஸா மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தேசிய அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளங்கள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவது மோசடிகளுக்கு வழிவகுக்கும் என இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
