இலங்கையில் எரிசக்திதுறை அபிவிருத்தியிலும், சுவீடனில் உள்ள மாணவர்களுக்கு கல்வி மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் சுவீடன் கவனம்

1 year ago


இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பது தொடர்பிலும் சுவீடன் அர சாங்கத்தின் கவனம் திரும்பி உள்ளதாக இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஜேன் தெஸ்லெப் தெரிவித்தார்.

பிரதமர் ஹரிணி அமர சூரிய மற்றும் சுவீடன் தூதுவருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுவீடன் அரசாங்கத்தின் முதலீடுகளின் போது, முதன்மையாக இலங்கையின் புதுப்பிக்கதக்க எரி சக்தித் துறையிலும், இலங்கையின் உணவுப் பாதுகாப்பிலும் சுவீடன்  அரசாங்கம் கவனம்          செலுத்துவதாகவும் தூதுவர் தெரி வித்தார்.

இதன்போது, சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் வீசா சிரமங்கள் குறித்து பிரதமர் ஹரிணி, சுவீடன் தூதுவரின்          கவனத்துக்கு கொண்டு சென் றுள்ளார்.

அண்மைய பதிவுகள்