வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவருக்கும் பாண்டிச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
8 months ago


வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவருக்கும் பாண்டிச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று 02.11.2024 இடம்பெற்றது.
தமிழ்நாடு பாண்டிச்சேரி அரசின் சுற்றுலாத்துறை ஒன்றிய அமைச்சருக்கும் வடமாண சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவர் சு.சுதர்சனுக்கும் இடையிலான சந்திப்பு சனிக்கிழமை பாண்டிச்சேரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவர் நட்பு ரீதியான சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பில் இலங்கை இந்திய சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாகவும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையை பார்வையிடுவதற்கான சுற்றுலா ஒழுங்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் சுற்றுலா தொடர்பான விளக்க கையேடு அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
