வடக்கு மக்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவோ முறையிடலாம் ஆளுநர் செயலகம் அறிவிப்பு
1 year ago

வடக்கு மாகாண மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது 021 221 9375, 021 221 9376 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவோ முறையிடலாம் என்று ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
இதுவரை நாளும் வடக்கு ஆளுநரின் பொது மக்கள் குறைகேள் வலையமைப்பான ‘அபயம்' ஊடாகவே மக்களின் குறைகள் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட் டன.
இந்த நிலையில், அண்மையில் புதிதாக ஆளுநராக பதவியேற்ற ஆளுநர் நா.வேதநாயகன் அதனை நிறுத்தியுள்ளார்.
அத்துடன், தன்னிடமே மக்கள் நேரடியாக குறைகளை முறையிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





