உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விடக் கூடாது. ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் அந்தப் போர் விரைவில் அணு ஆயுதப் போராக மாறிவிடும்- இவ்வாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த ரஷ்யா, கடந்த 2022 இல் அந்த நாடு மீது போர் தொடுத்தது. உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என நினைத்து போரை தொடங்கிய ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள், நிதி உதவிகள் வழங்கி வருவதால் ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரைன் ஏற்படுத்தி வருகிறது. இதனால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் போர் நீடித்து வருகிறது. இதனிடையே, இந்தப் போரின் போக்கு தற்போது ரஷ்யாவுக்குச் சாதகமாக சென்று கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக இந்தப் போரில் தங்கள் இலக்கை எட்டுவதற்கு அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கான தேவை இருக்காது என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். அதே சமயம், ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என மேற்கத்திய நாடுகள் எண்ணுவது தவறு என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்குவதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம் என்று எச்சரித்துள்ள புடின், ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் அந்தப் போர் விரைவில் அணு ஆயுதப் போராக மாறி விடும் என்றும் எச்சரித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
