அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக் வாகனம் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்
6 months ago


அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக் வாகனம் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுவருடதினத்தன்று பொதுமக்கள் அதிகமாக காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்படும் போர்பென் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டிரக் வண்டியொன்று வேகமாக வந்து பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அதிலிருந்த நபர் ஒருவர் இறங்கி பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்,பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
