கடவுச்சீட்டு பெறுவதில் நெருக்கடி காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை- எம்பி விஜித ஹேரத் தெரிவிப்பு.

1 year ago


தற்போது நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள நெருக்கடி காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள தாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையான புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பெறுவதிலுள்ள நெருக்கடி காரணமாக இவர்களால் தமது கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க முடியாமல் உள்ளது. அரசாங்கம் திட்டமிட்டு இதனைச் செய்கிறதா என சந்தேகிக்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.