கடவுச்சீட்டு பெறுவதில் நெருக்கடி காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை- எம்பி விஜித ஹேரத் தெரிவிப்பு.
10 months ago

தற்போது நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள நெருக்கடி காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள தாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையான புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பெறுவதிலுள்ள நெருக்கடி காரணமாக இவர்களால் தமது கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க முடியாமல் உள்ளது. அரசாங்கம் திட்டமிட்டு இதனைச் செய்கிறதா என சந்தேகிக்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
