மலையக தமிழ் எம்.பிக்கள் இருவர் தனியார் தொலைக்காட்சி விவாத இடைநடுவில் கைகலப்பில் ஈடுபட்டனர்.




மலையக தமிழ் எம்.பிக்கள் இருவர் தனியார் தொலைக்காட்சி விவாத இடைநடுவில் கைகலப்பில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோருக்கு இடையிலேயே கைகலப்பு ஏற்பட்டது.
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் இவ்வாறு நிகழ்ச்சியின் இடை நடுவில் மோதிக் கொண்டுள்ளனர்.
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களைப் போன்று கட்சித் தாவல்களும் சூடுபிடித்துள்ளன.
இந்த நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கட்சியின் தீர்மானத்தை மீறி, தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் உள்ளக மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒருவர் மாற்றி ஒருவர் பொது வெளிகளில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை துரோகி என பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய நிலையில், வாக்குவாதம் தீவிரமடைந்து அது மோதலில் முடிவடைந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ள நிலையில், வேலுகுமாரைப் பார்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் “பார் குமார்” என்று கிண்டலடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
