உண்ணிக் காய்ச்சலால் யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

1 year ago


உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது யுவதியே உயிரிழந்தார்.

காய்ச்சல் காரணமாக இந்த யுவதி யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவர் உண்ணிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமை மருத் துவமனையில் கண்டறியப்பட் டதையடுத்து, 10 நாட்களாக தொடர் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அந்த யுவதி உயிரிழந்தார்.

அண்மைய பதிவுகள்