கனேடிய தமிழர் பேரவையின் உதவியுடன் 'Made In Mullaitivu' எனும் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது







கனேடிய தமிழர் பேரவையின் உதவியுடன் 'Made In Mullaitivu' எனும் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்பு நிலையம், நேற்றைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு முல்லைத்தீவில் மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினர் வவுனியா பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் பீடத்தின் பீடாதிபதி யோ.நந்தகோபன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வேண்டுகோளுக்கமைய, கனேடியத் தமிழர் பேரவையின் நிதியுதவியுடன் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்றிட்டத்தினூடாக உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதோடு, உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்க முடியும்.
இது வெற்றிபெறும் பட்சத்தில் நிலையான பொருளாதார கட்டமைப்பொன்றை வடக்கு, கிழக்கில் உருவாக்க முடியும் எனவும் நம்பப்படுகின்றது.
இவ் விழாவில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், இலங்கைக்கான கனேடியத் தூதரக அதிகாரிகள், கனேடிய தமிழர் பேரவையின் பிரதி நிதிகள் மற்றும் இத்திட்டத்துக்கான நன்கொடையாளர்கள், பொதுமக்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
