
கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதால் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைவடையும் என கனேடிய அரசு தெரிவித்துள்ளது.
ஆனாலும் கனேடிய அரசு எதிர்பார்த்ததை விட புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கனடா வங்கி கருத்து வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை 6.2 சதவீதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்த நாடு அறிவித்திருந்தது.
எனினும், கனடா வங்கியின் கருத்து கனேடிய அரசாங்கத்தின் கருத்துக்கு முரணாக உள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு மாறாக இந்த வருடம் ஏப்ரல் மாத துவக்கத்தில் கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6.8 சதவீதமாக இருந்ததாக கனடா வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், புலம்பெயர்ந்தோர் தொடர்பாக கனேடிய அரசாங்கத்தின் குறிக்கோளை அடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனவும் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
