இந்தியா செல்லும் இலங்கையருக்கு இலவச விஸா வழங்குமாறு இந்திய அரசிடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை

இந்தியா செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விஸாவை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை - இந்தியா இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இது ஏதுவாக அமையும் என்று வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கையின் இந்த கோரிக்கை தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மன், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளுக்கு இலவச விஸா வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து 6 மாதங்களுக்கு இத்திட்டம் நடைமுறையிலுள்ளது.
மேற்கூறப்பட்ட நாடுகளோடு நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், டென்மார்க், போலந்து, கசகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், செக் குடியரசு, இதாலி, சுவிஸ்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், இரான், சுவீடன், கட்டார், ஓமான், பஹ்ரைன் மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இந்த இலவச விஸா நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையிலேயே இலங்கை பிரஜைகளுக்கும் இலவச விஸா வழங்குவது குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
