
ஒரே இரவில் 37 உக்ரைனின் டிரோன்களை அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷியாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வரும் நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று இரவு ரஷியா கூட்டமைப்பின் எல்லையில் உள்ள இலக்குகள் மீது டிரோன்களை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை நடத்த உக்ரைன் முயன்றபோது, ரஷிய ராணுவம் அதை இடைமறித்து அழித்தன.
அதில் 12 டிரோன்கள் குர்ஸ்க் பிராந்தியத்தின் மீதும், 12 கிராஸ்னோடர் பிரதேசத்தின் மீதும், ஏழு பிரையன்ஸ்க் பிராந்தியத்தின் மீதும், ஐந்து ஓரியோல் பிராந்தியத்தின் மீதும் மற்றும் ஒன்றூ அசோவ் கடல் மீதும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
