இலங்கை முன்னாள் எம்.பிகளுக்குரிய ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படவுள்ளது.-- ஜனாதிபதி தெரிவிப்பு
6 months ago

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் வெகுவிரைவில் இரத்துச் செய்யப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படவுள்ளது.
அத்துடன், இனிவரும் நாள்களில் நாடாளுமன்ற உணவகத்தில் சலுகை விலையில் உணவுகள் வழங்கப்படாது.
வெளியில் என்ன விலைக்கு பொதுமக்களுக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றனவோ, அதே விலைக்குத்தான் நாடாளுமன்ற உணவகங்களிலும் உணவுகளைப் பெறக்கூடியதாக இருக்கும் - என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்களில் மானிய விலையிலேயே இதுவரை உணவு வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
