மானிப்பாயில் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

1 year ago


யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் நேற்றையதினம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்