கனடாவில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.

கனடாவில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவரான நவ்ப்ரீத் சிங் நவி என்பவர், ஒரு ஆண்டுக்கு முன், வேலை தேடி கனடாவுக்குச் சென்றுள்ளார்.
ஒன்ராறியோவுக்கு அருகே நவி வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அவரது வாகனம், எதிரே வந்த மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நவியும், மற்ற வாகனத்தில் இருந்த அர்ஷ்தீப் சிங்கும், அவருடன் பயணித்த மற்றொரு நபரும் என மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.
அர்ஷ்தீப் மற்றும் அவருடன் பயணித்த மற்றொரு நபர் ஆகிய இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
உயிரிழந்த அந்த மூன்றாவது நபர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.
உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு அவர்களுடைய குடும்பத்தினர் இந்திய அரசைக் கோரியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
