
சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பெரும்பாலான உணவகங்களில் தேங்காய் சம்பல், பால் சொதி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் தெரிவித்தார்.
தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரை அதிகரித்து காணப்படுகிறது.
இதேவேளை அரிசி, முட்டை, உப்பு, தேங்காய் ஆகிய பொருட்களின் விலைகள் 30 வீதத்தால் அதிகரிக்கக்கூடும்.
ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவிலிருந்து 1280 ரூபாவாக உயர்ந்துள்ளது.
எனவே, தேங்காய்களின் விலை உயர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் இடியப்பம் தயாரித்தல், மதிய உணவுகளை தயாரித்து விற்பனை செய்யும் பணிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷன ருக்ஷன் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
