யாழ். வடமராட்சி உடுப்பிட்டியில் மதுபானசாலையை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 29 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

யாழ். வடமராட்சி உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி, இமையாணன் மேற்கில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த 35 பொது அமைப்புக்களால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த வருடம் மே மாதம் 5 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்காளிகளான பொது அமைப்புக்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
நேற்று முன்தினம் குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு வழக்குத் தவணையிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
