இலங்கையில் மோசமான வானிலையால் நால்வர் உயிரிழந்தனர், 06 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்தப் பிரிவு தெரிவிப்பு
7 months ago



இலங்கையில் தொடரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த மோசமான காலநிலை காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிராந்திய செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் குறிப்பிட்டார்.
குறித்த பகுதிகளில் 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
