பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளை நீக்க சட்டமா அதிபர் மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை நீக்குவதற்கான தலையீடுகளை சட்டமா அதிபரை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
"தலைதூக்கி வரும் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு எதிராக 17 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளுக்கு அதிகாரிகள் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது.
இதனால் சில அதிகாரிகள் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளில் இருந்து விலகச் சென்றுள்ளனர்.
ஆகவே, அவர்களுக்கு எதிராக குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை நீக்கவும் அவர்கள் தொடர்ந்து செயல்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.”
சந்திப்பில் கலந்துகொண்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சட்டமா அதிபரை தலையீடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இந்த வழக்குகளை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து பாதாள உலக குழுக்களை அழிக்கும் செயல்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனையையும் வழங்கினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
