யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்திட்டத்தின் முதலாம் கட்டமாக, இந்தமாத நடுப்பகுதியில் பளை பிரதேசத்துக்கு குடிதண்ணீர் விநியோகிக்கப்படவுள்ளது என்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொறுப்பு வாய்ந்த செயற்றிட்ட அதிகாரி தெரிவித்தார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இதை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தகவல் ஒன்றை வழங்கியுள்ளது. குறிக்கப்பட்ட காலப்பகுதியில் பளை நோக்கி தண்ணீர் விநியோகிக்கப்படவுள்ளது.
நீர் விநியோகத்துக்காக, தாழையடியிலிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு கொண்டுவரப்படவுள்ளது. அதே வேளை, சுமார் 266 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிகிளிநொச்சி, யாழ்ப்பாணம் குடிதண்ணீர் விநியோகத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
