லசந்த கொலை தொடர்பில் மறைக்கப்பட்ட சாட்சிகளை, தேடும் புதிய நடவடிக்கையை பாதுகாப்புத்துறை ஆரம்பித்துள்ளது

லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மறைக்கப்பட்ட சாட்சிகளை, ஆதாரங்களை தேடும் புதிய நடவடிக்கையை பாதுகாப்புத்துறை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அதே சமயம் லசந்த கொலை, அவரது சாரதி கடத்தல் முயற்சி போன்றவற்றில் சந்தேக நபர்களாக கருதப்படுவோர்மீது சாட்சியங்கள் இருப்பின் அவற்றை தொகுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களமும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
லசந்த கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத காரணத்தினால் அதில் அரசியல் அழுத்தங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராயுமாறு கடந்த வாரம் சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.'
இதற்கிடையில், குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பான சட்ட மா அதிபரின் விருப்புரிமை மற்றும் நடைமுறைகளில் அமைச்சரவை அல்லது அரசியல் அதிகாரிகள் தலையிடக்கூடாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
