யாழ்.சாவகச்சேரி நீதிமன்றம் தாக்கப்படப் போவதாக பொலிஸாருக்கு வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு

1 year ago





யாழ்.சாவகச்சேரி நீதிமன்றம் தாக்கப்படப் போவதாக பொலிஸாருக்கு வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (29) காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்திற்கு தாக்குதல் நடத்தப்பட போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு மர்ம நபர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி கிடைத்தது.