தடி கழுத்தில் குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்த்த முதியவர் காப்பாற்றப்பட்டார்.
6 months ago

கூரிய தடி ஒன்று கழுத்தில் குத்தி கழுத்தை ஊடறுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முதியவர், வைத்தியர்களால் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் கூரிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் காப்பாற்றப்பட்டார்.
குறித்த சத்திரசிகிச்சை இன்று (25) இடம்பெற்றது.
முதியவர், உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன், விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சை மூலம் அவரது கழுத்தில் இருந்து தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.
இவ் வெற்றிகரமான சத்திரசிகிச்சை உணர்வழியியல் மருத்துவ நிபுணர் நாகேஸ்வரன் தலைமையிலான மயக்க மருந்து (Anesthesia) அணியினருடன் இணைந்து சத்திரசிகிச்சை நிபுணர் ரஜீவ் நிர்மலசிங்கம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
