இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக சி. சிறீதரன் செயல்படுவார் மத்திய குழு அறிவிப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக சி. சிறீதரன் செயல்படுவார் என்று அந்தக் கட்சியின் மத்திய குழு அறிவித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இதிலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.
இதேவேளை, கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று சிறீதரன் மேலும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 7 ஆசனங்களை கைப்பற்றியது.
அத்துடன், தேசியப் பட்டியல் மூலமாக ஓர் ஆசனத்தை கைப்பற்றி 8 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக உள்ளது.
தற்போது தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறீதரன் மட்டுமே நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
அவர் கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
