உக்ரைன் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அந்த நாட்டு ஜனாதிபதியுடன்இணைந்து அஞ்சலி செலுத்தினார்.

உக்ரைன் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அந்த நாட்டு ஜனாதிபதியுடன்இணைந்து அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோடி, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்குச் சென்றார். போலந்து நாட்டிலிருந்து ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்த மோடி, அங்குள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
பிறகு இரு தலைவர்களும் அங்கிருந்த மல்ரிமீடியா காட்சிக் கூடத்துக்கு சென்றனர். அங்கு ரஷ்யாவுடனான போரில் ஏராள மான குழந்தைகள் கொல்லப்பட் டமை தொடர்பான காட்சிகளை மோடி பார்வையிட்டார். பிறகு இரு தலைவர்களும் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்துக்கு சென்றனர். ஏராளமான பொம்மைகள் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் பிரதமர் மோடி கூப்பிய கரங்களுடன் அமைதியாக பிரார்த்தனை செய்தார்.பிறகு சிறிய பொம்மையை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
