கென்யாவில் உள்ள பாடசாலை விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

1 year ago


கென்யாவில் உள்ள பாடசாலை விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

கிழக்கு ஆபிரிக்காவில் அமைந் துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலை உள்ளது. இந்தப் பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இப்பாடசாலையில் தங்கிப் படிக்கும் வகையில் மாணவர் விடுதியுள்ளது. இதில் பல மாணவர்கள் தங்கிக் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பாடசாலையில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு பயங்கரத்தீ ஏற்பட்டது. இந்தக் கோரத் தீயில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்த பொலிஸார், தீயணைப்புத் துறையினர் பாடசாலை விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்து காயமடைந்த மாணவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக் காகச் சேர்க்கப்பட்டனர்.

தீ விபத்துக் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.