இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிப்பதாகக் கூறி பல நிறுவனங்கள் நிதிமோசடியில் ஈடுபடுகின்றன

1 year ago



வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளாத நிலையில், வாகன இறக்குமதிக்கு அனுமதியளிப்பதாகக் கூறி பல நிறுவனங்கள் நிதிமோசடியில் ஈடுபட்டுவருகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் அமிந்த மெட்சில பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், இதுதொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.

எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்ற கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி புதிய வாகனங்களுக்காக சில நிறுவனங்கள் இலட்சக்கணக்கான ரூபாவை முற்பணமாகப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைய பதிவுகள்