அதிக வேகத்துடன் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண 30 வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன.
1 year ago



அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண 91 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 30 வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 30 வேகமானிகளும் பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கான நிகழ்வு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரியவின் தலைமையில் நேற்று முற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.
அதன்படி, அதன் முதற்கட்டமாக நீர்கொழும்பு, களனி, கம்பஹா ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும், மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு பணிப்பாளருக்கும் அமெரிக்க தயாரிப்பிலான மேற்படி வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





