பலாலிப் பொலிஸாருக்கு எதிராக, கஜேந்திரனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடு
5 months ago

பலாலிப் பொலிஸாருக்கு எதிராக, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரைக்கு எதிராக தம்மால் மேற்கொள்ளப்பட்ட நியாயமாக போராட்டத்துக்காக, பொலிஸார் பழி வாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்று குறிப்பிட்டே செல்வராசா கஜேந்திரானால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயக அரசியல் உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து மௌனமாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நயனகித்தின் திட்டமிட்ட விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் கவனத்தில் கொள்ளவும் தலையிடவும் வேண்டும் என்று முறைப்பாட்டாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் கோரியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
