நாடாளுமன்ற தெரிவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேல் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
8 months ago

நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளோரில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேல் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
இதன்படி, 225 பேரில் 176 பேர் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் காணப்படுகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ள 40 ஆசனங்களில் 6 பேர் முதன் முறையாக சபைக்கு வருகின்றனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நான்கு புது முகங்களும், பெரமுனவின் சார்பில் ஒருவரும், யாழில் சுயேச்சைக் குழு சார்பில் ஒருவரும் முதன்முறையாக சபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியில் இருந்தே பெரும்பாலான புதுமுகங்கள் சபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
