மருத்துவ சங்கத்தினர் கல்முனை மருத்துவமனைக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு.

பௌத்த தேரர் தலைமையிலான மருத்துவ சங்கத்தினர் மட்டக்களப்பு கல்முனை ஆதார மருத்துவமனைக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை அன்பளிப்புச் செய்தனர்.
மருத்துவ சேவைகள் சங்கம், அவுஸ்திரேலியாவின் வன்னி ஹோப் லிமிடெட்டுடன் இணைந்து, கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனைக்கு 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திங்கட்கிழமை வழங்கியது.
மருத்துவ சேவை சங்கத்தின் பணிப்பாளர் ராஜவல்லே சுபுதி தேரர், அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து உபகரணங்களை தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொண்டார்.
அவுஸ்திரேலியாவின் வன்னி ஹோப் லிமிடெட் இயக்குநர் ரஞ்சன் சிவஞானசுந்தரம், கப்பல் கட்டணம் மற்றும் தொடர்புடைய வரிகளைச் செலுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.
மருத்துவ சேவை சங்கம், வன்னி ஹோப் அறக்கட்டளையின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், தாதியர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
