யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
8 months ago

யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
சுண்டுக்குழியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாஸன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த நபருக்கு வாய்பேச முடியாது என்பதுடன் காதும் கேட்காது.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் கச்சேரி வீதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளை ரயில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
