இலங்கையின் மொத்தக் கடன் நிலுவை 100.18 பில்லியன் டொலர் எனவும் செலுத்தப்படாத கடனுக்கான வட்டி 6.4 பில்லியன் டொலர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் இறுதியில் 96.17 பில்லியன் டொலராகக் காணப்பட்ட கடன் நிலுவை தவறான நிதி திட்டமிடல்கள் காரணமாக 100.18 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் இறுதியில் 12.63 பில்லியன் டொலராகக் காணப்பட்ட உள்நாட்டுக் கடன் நிலுவை இந்த வருடத்தின் முதல் மாதங்களில் 12.92 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
உள்நாட்டுக் கடனுக்கான வட்டி 2.45 பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜப்பான், சீன உதவித் திட்டங்களும் கடனாகவே வழங்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
