போரில் உயிரிழந்தோருக்கு எனது சொந்தச் செலவில் பொது நினைவுத்தூபி அமைக்கத் தயார்.-- அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு

போரில் உயிரிழந்தோருக்கு எனது சொந்தச் செலவில் பொது நினைவுத்தூபி அமைக்கத் தயார் என்று பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், நீண்டகால உள்நாட்டு போரால் மக்கள் பலரை இழந்து விட்டோம்.
இனங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்மை மற்றும் சம உரிமை கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களால் போர் உருவாகி பலரையும் காவுகொண்டுவிட்டது.
இந்த யுத்தத்தால் தமிழ் மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் மௌனித்து 15வருடங்கள் கடந்து விட்ட போதிலும் தமிழ் மக்கள் யுத்த வடுவில் இருந்து மீள முடியாமல் உள்ளனர்.
அத்தோடு, தமிழ் மக்களுக்கு உறவுகளை நினைவுகூருவது கூட சவால் நிறைந்ததாகவே உள்ளது.
இந்நிலையில் பொதுவான நினைவுத்தூபி ஒன்றை அமைத்து போரில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு அரசாங்கம் அனுமதி வழங்கும் பட்சத்தில் எனது சொந்த செலவில் பொதுவான நினைவுத் தூபியை நிறுவுவேன் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
