ஜனாதிபதியும் நீதியமைச்சரும் உயர்நீதிமன்றத்துக்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் - இலங்கை சட்டத்தரணிகள் ஒன்றிணைவு என்ற சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது
ஜனாதிபதியும் நீதியமைச்சரும் சமீபத்தில் உயர்நீதிமன்றத்துக்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் நீதித்துறையை அச்சுறுத்தும் தன்மை கொண்டவை என்று இலங்கை சட்டத்தரணிகள் ஒன்றிணைவு என்ற சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பால்நிலை சமத்துவ சட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக தெரிவித்த கருத்துகளும் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துகளும் நீதித்துறையை அச்சுறுத்தும் தன்மை கொண்டவை என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி நீதியமைச்சர் கல்வியமைச்சர் ஆகியோர் நிறைவேற்று அதிகாரத்தின் முழுமையான பிரதிநிதிகள். உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிக்கும் முக்கிய அரசமைப்பு அதிகாரம் மற்றும் பொறுப்பை ஜனாதிபதி செயற்படுத்துகின்றார் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நீதியமைச்சர் நீதித்துறையின் வளங்களை கட்டுப்படுத்துகின்றார் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி உயர் நிறைவேற்று அலுவலகம் நீதித்துறை குறித்து நயவஞ்சகமான கடுமையான கருத்துக்களை வெளியிடுவது தெளிவான அதிகார துஸ்பிரயோகமாகும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
