சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் குறித்த பகிரங்க பிடியாணையைப் பிறப்பித்துள்ளார்.
புத்தளம் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை எதிரியாக குறிப்பிட்டு கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாம் பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்று தாக்கல் செய்த வழக்கை விசாரித்த போதே நீதவான் மேற்படி உத்தரவை வழங்கினார்.
அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டடத்துக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
