
இலங்கை புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் 53 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் 6 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
அந்த சங்கத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 13 மாதங்களில் 53 இலட்சம் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சங்கத்தால் ஆவணங்கள் சரியான முறையில் பேணப்படாத நிலையில் இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பணிமனையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
