கிளிநொச்சி, முகமாலை பகுதியில் வீதியில் தேங்கிக் கிடந்த வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.
6 months ago

கிளிநொச்சி, முகமாலைப் பகுதியில் வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க் கிழமை முற்பகல் 9:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முகமாலை வடக்கு, பளையைச் சேர்ந்த மாணிக்கம் உதயகுமார் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் முகமாலை வடக்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த வீதியால் பயணித்தபோது வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெ டுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
