தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி இன்று (26) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடுவது மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற அழைப்புக்களை ஏற்பதா இல்லையா என்பதை ஒருமித்து முடிவெடுப்பது, வடகிழக்கில் தேர்தல் பிரச்சாரங்களை முழு வீச்சில் முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றையதினம் எடுக்கப்பட்ட இந்த தீர்மானங்கள் அனைத்தையும் தேர்தல் காலம் முடியும் வரையில் அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற வடகிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதன் பிரதிநிதிகள் சிவில் சமூகத்தினர் என பலரூம் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
