இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் இன்று அறிவித்துள்ளது.

2 years ago


இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் இன்று (24) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயாகி, JICA இலங்கை அலுவலக பிரதானி யமடா டெட்சுயா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையில் நிதியமைச்சில் இடம்பெற்றது.