யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
9 months ago

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவபாலன் அச்சுதன் வணிகவியல் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார்.
இதேபோன்று, விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச் செல்வன் இலத்திரனியல் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
