
திருகோணமலை, கடலில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிக் காணாமல்போன 20 வயதான இளைஞர் இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை திருகோணமலை கடற்கரையில் நண்பர்களான 4 பேர் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினர்.
அவர்களில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அத்தோடு ஒருவர் காணாமல் போனதையடுத்து அவரைத் தேடும் பணி திருகோணமலை கடற்படையினர் மற்றும் துறைமுகப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து காப்பாற்றப்பட்ட இளைஞர்கள் மூவரும் விசாரணைக்காகத் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், காணாமல்போன இளைஞர் இன்று காலை சடலமாக மீட்கப்படுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
